வீட்டுக்கு பாண் வாங்கிக்கொண்டு சென்ற முதியவரிடமிருந்து பாணை பறித்துச் சென்ற வழிப்பறி கோஷ்டி!

யாழ்.கோண்டாவில் பகுதியில் வீட்டுக்கு பாண் வாங்கிக் கொண்டு சென்ற முதியவரிடமிருந்து 2 றாத்தல் பாளை இரு இளைஞர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

கோண்டாவில் சந்தியில் இருந்து இராசபாதை நோக்கிப் பயணித்தவரிடமே நேற்று மாலை 6 மணியளவில் இவ்வாறு பாண் பறிக்கப்பட்டுள்ளது.

கோண்டாவில் சந்திக்கு துவிச்சக்கர வண்டியில் வந்து 2 றாத்தல் பாண் வாக்கிகொண்டு வீடு நோக்கிப் பயணித்த முதியவரிடம் இருந்த பாணை

இரு இளைஞர்கள் பறித்துச் சென்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews