இலங்கையில் இருந்து அகதிகளாக 3 பேர் இந்தியா சென்றனர்….!

இலங்கையில் இருந்து அகதிகளாக 3 பேர் சென்றுள்ளனர். ஏற்கனவே 22 குடும்பங்களை சேர்ந்த 80 பேர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறி, பால் உள்ளிட்ட பொருட்கள் விலையும் கிடுகிடுவென உயர்ந்து மக்கள் வாழ்வதற்கு வழி இன்றி ஒரு வேளை உணவிற்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆளும் அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் அடுத்து அந்நாட்டு அதிபர் ராஜினாமா செய்ய பட்டதை அடுத்து இலங்கையில் புதிய பிரதமர்கள் நியமிக்கப்பட்டாலும் மக்களுடைய போராட்டங்களை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது

இந்த நிலையில் இலங்கையில் வாழ வழியின்றி தமிழர்கள் ஏற்கனவே 22 குடும்பங்களை சேர்ந்த 80 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்து மண்டபம் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் இன்று மூன்று நபர்கள் இலங்கையில் வாழ வழியின்றி அகதிகளாக ராமேஸ்வரம் அடுத்த கோதண்டராமர் கோவிலில் தஞ்சம் அடைந்தவர்களை மரைன் போலீசார் அழைத்து வந்து மண்டபம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews