அனுமதிப் பத்திரமின்றி டீசல் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது.

குறித்த நபர் 215 லீற்றர் டீசலை அனுமதிப் பத்திரமின்றி வீட்டில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  புத்தளம் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் சிக்கியுள்ளார்.

அனுமதிப் பத்திரமின்றி டீசல் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது (Photo)

இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட டீசலுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அனுமதிப் பத்திரமின்றி டீசல் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது (Photo)

Gallery Gallery

Recommended For You

About the Author: Editor Elukainews