பாடசாலை வாகனங்களுக்கு இதுவரை டீசல் விநியோகிக்கப்படவில்லை- ஆனந்த பாலித்த –

இன்று திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எனினும் பாடசாலைக்கு செல்வதற்கான பாடசாலை வான்கள், பஸ்களுக்கு தற்போதுவரை டீசலை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(5) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் என்றுமே இல்லாதளவு டீசலுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் நிலைமை தற்போது நாட்டில் உருவாகியுள்ளது.

கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையில் தற்போதைய நிலையில் 28,000 மெட்ரிக் தொன் டீசல் காணப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews