எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது…..!

இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் கைதது செய்துள்ளனர்.

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவரும் 65 வயது நபர் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

42 லீற்றர் 750 மில்லிலீற்றர் பெற்றோல், 28 லீற்றர் 500 மில்லிலீற்றர் டீசல், 242 லீற்றர் மண்ணெண்ணெய் என்பவையே இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: Editor Elukainews