
அம்பாறை மாவட்டம் – ஒலுவில் பல்லக்காடு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 4 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தையின் தாயும், தந்தையும் கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்றிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தாயும் யானை தாக்கியதில் காயமடைந்து அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது