யாழில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி இருவர் படுகாயம்.

யாழ்.பொன்னாலை பகுதியில் அடையாளம் தெரியாத நபரொருவரின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் பொன்னாலையை சேர்ந்த கி.பூபாலரத்தினம் வயது-57, பகிரதன் வயது 41 ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு இதுவரை பொலிஸார் வருகைதரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews