ஒரு குடும்பத்தால் கொள்ளையடிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்- எதிர்க் கட்சித் தலைவர்.

ஒரு குடும்பத்தால் கொள்ளையடிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

புதிய நவீனத்துவ ஒரு இலங்கையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட முக்கியஸ்தர்கள் பலரை நேற்று(13) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்தனர்.

இதன்போதே எதிர்க் கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முழு உரிமமாக ஒரு குடும்பம் நாட்டை எழுதி எடுத்துக்கொண்டு முழு நாட்டையும் கொள்ளையடித்துள்ளது. இரண்டு வருடங்களாக நாடு ராஜபக்ஸவாதத்தையும் குடும்பவாதத்தையுமே பின்பற்றியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews