எரிபொருள் வாங்க வரிசையில் காத்திருந்த 19 வயது இளைஞன் பரிதாபகரமாக மரணம்..!

எரிபொருள் வாங்குவதற்கு வரிசையில் காத்திருந்த 19 வயதான இளைஞன் கொள்கலன் லொறி ஒன்றின் சக்கரத்திற்குள் சிக்கி உயிரிழந்துள்ளான்.

அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின் பந்துலகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவிக்கையில், எனது மகன் வௌிநாடு போக வேண்டும் என்றார்.

நாட்டை விட்டுப் போகாதே என நான் சொன்னேன். நீ இங்கேயே இரு. எப்படியாவது இங்கேயே வாழ்வோம் என்றேன்.

பிறகு வவுனியாவுக்குப் போக வேண்டி இருந்ததால் தான் எரிபொருள் வாங்க சென்றார். இதன்போதுதான் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வரிசையில் நின்ற சுமார் 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews