மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது துப்பாக்கி சூடு..! ஒருவர் பலி, 2 வயது குழந்தை உட்பட இருவர் படுகாயம்.. |

மனைவி மற்றும் மகனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ள நிலையில் 2 வயது மகன் மற்றும் வீதியால் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் பேலியகொட – பட்டிய சந்தியில் நேற்றைய தினம் மாலை  இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது மனைவி மற்றும் இரண்டு வயது மகனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் வீதியில் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 2 வயது சிறுவனும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews