மட்டு.மண்முனை வடக்கு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி வங்கிகளில் கடமையாற்றும் வங்கி முகாமையாளர்கள் , வங்கி அலுவலக உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் .

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக அரச அலுவலக கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் தமது பணிகளை முன்னெடுத்தில் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன் தமக்கான எரிபொருளை வழங்குமாறு கோரி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி வங்கிகளில் கடமையாற்றும் வங்கி முகாமையாளர்கள் , வங்கி உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமது கடமைகளுக்கு செல்வதற்கும் தமது பணிகளை முன்னெடுப்பதற்கு எரிபொருளை வழங்குமாறு கோரி இன்றைய தினம் வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

அலுவலக கடமைகளுக்கு செல்லும் தமக்கும் எரிபொருளை வழங்காத பட்சத்தில் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட போவதாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி வங்கிகளில் கடமையாற்றும் வங்கி முகாமையாளர்கள் , வங்கி அலுவலக உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews