மர்ம நபர்களால் பிரதேச செயலக பெண் அதிகாரி கொல்லப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம்! பெண்ணின் கணவன் கைது,

வீட்டுக்குள் புகுந்த மர்ம நபரினால் லங்காபுர பிரதேச செயலக தலைமை பெண் அதிகாரி கொல்லப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

லங்காபுர பிரதேச செயலக தலைமை நிர்வாக அதிகாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கடந்த 4ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தார்.

யமுனா பத்மினி என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், குறித்த பெண்ணின் கணவர் தற்போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews