வடமாகாண தாதிய உத்தியோகஸ்த்தர்களின் வருடாந்த இடமாற்றத்தை ஒத்திவைக்கும்படி பணிப்பு..!

வடமாகாண வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்களின் இடமாற்றத்தை உடன் கைவிடுமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மாகாண சுகாதார பணிப்பாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். 

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் அறியக்கிடைத்துள்ளதாவது, வடமாகாண வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்களுக்கு வருடாந்த இடமாற்றத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேற்படி விடயம் தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்கு சென்றிருந்த நிலையில் நாட்டில் தற்போதுள்ள பொருளாதார மற்றும் இன்னோரன்ன நெருக்கடிகள் காரணமாகவும்,

சுகாதாரத்துறை நாட்டின் அத்தியாவசிய துறைகளில் முன்னிலையில் இருப்பதாலும் திட்டமிடப்பட்ட இடமாற்ற நடவடிக்கைகளை ஒத்திவைக்கும்படி மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனுக்கு, மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணிப்புரை வழங்கியிருக்கின்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews