நாளை முதல் 3 மணித்தியாலங்கள் மின் வெட்டு.

நாடு முழுவதும் நாளை தொடக்கம் 8ம் திகதி வரையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல் வேலையில் 1 மணி 40 நிமிடங்களும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்சாரம் தடைப்படும்.

கொழும்பு மாநகரப் பகுதியில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை 2 மணிநேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவுள்ளது.

இதேவேளை, M, N, O, X, Y, Z வலயங்களில் காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews