வடக்கில் 3,600 லீற்றர் மண்ணெண்ணையுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – முழங்காவில் நாச்சிக்குடா பகுதியில் 3 ஆயிரத்து 600 லீற்றர் மண்ணெண்ணையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
முழங்காவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, கொள்கலன்களில் நிறைத்து வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய 55 வயதான ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன், 3 ஆயிரத்து 600 லீற்றர் மண்ணெண்ணையும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மண்ணெண்ணை வெள்ளை நிறமானது எனவும், இலங்கையில் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணையிலிருந்து வேறுபட்டு காணப்படுவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த மண்ணெண்ணை இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் முழங்காவில் பொலிஸார், விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைக்குட்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews