மற்றுமொரு இராஜினாமா தொடர்பான அறிவிப்பு! பொதுஜன பெரமுனவை கைவிட்ட முக்கியஸ்தர்.

போக்குவரத்து மற்றும் ஏனைய அமைச்சுப் பதவிகளில் இருந்து தாம் விலகியுள்ளதாக  அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார். 

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றினை அவர் இட்டுள்ளார்.

புதிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதே பெரும்பான்மையான மக்கள் மற்றும் மதத் தலைவர்களின் எதிர்பார்ப்பாக  இருப்பதால் தான்  அமைச்சு பதவிகளில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

அத்துடன் பொதுஜன பெரமுன கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

 

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற ஒரு சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக தனது பங்களிப்பை வழங்கவுள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews