யாழில் இடம்பெற்ற கைதுகள்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் நாவற்குழியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பெருங்குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் சந்தேகநபரிடமிருந்து 18 துவிச்சக்கர வண்டிகள் முழுமையாகவும்,உதிரிப்பாகங்களாகவும் கைப்பற்றியுள்ளனர்.

 

நேற்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு பகுதிகளில் கசிப்புடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூளாய் – முன்கோடை பகுதியில் கசிப்பினை விநியோகம் செய்த வேளை 48 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து பொலிஸார் 1500 மில்லிலீற்றர் கசிப்பினை கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை சுழிபுரம் – குடாக்கனை இரட்டை கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் 1500 மில்லிமீட்டர் கசிப்பினை விநியோகம் செய்ய முற்பட்டவேளை அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews