மன்னாரில் எரிபொருள் அட்டை ஊடாக எரிபொருள் விநியோகம்.

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலகத்தின் கண்காணிப்பில் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.

எரிபொருள் அட்டையை பெற்றுக் கொண்டவர்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய, நாளை ஞாயிற்றுக்கிழமை(17) காலை 8 மணி முதல் மதியம் 10:20 மணி வரை சாவற்கட்டு கிராம மக்களும்,12-15 மணி முதல் 3.30 மணி வரை சின்னக்கடை கிராம மக்களும்,மாலை 3.30 மணி முதல் 6 மணி வரையும்,இரவு 7.30 மணி முதல் 10 மணி வரை மூர்வீதி கிராம மக்களும் தமது வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.

நாளை  திங்கட்கிழமை (18) காலை 8 மணி முதல் 10.20 மணி வரையும்,மதியம் 12.15 மணி முதல் மாலை 4 மணி வரை எமில் நகர் கிராம மக்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் தெரிவித்துள்ளார்.

குறித்த கிராமங்களை தவிர்ந்த ஏனைய கிராம மக்களுக்கு இந்த தினங்களில் வழங்கப்படமாட்டாது. ஏனைய கிராமங்களுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery

Recommended For You

About the Author: Editor Elukainews