தென்மராட்சியில் மேலும் இருவருக்கு கொரோனா!

தென்மராட்சியில் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை எல்லைக்குட்பட்ட தென்மராட்சிப் பிரதேசத்தில் மேலும் இருவர் கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கச்சாய் வீதி கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 82வயதான முதியவர் ஒருவரும், நேற்று கச்சாய் வீதி சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த 67 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு புதிய கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த இருவரும் நோய் அறிகுறி தென்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில் மேற்கொண்ட அன்ரிஜன் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இம்மாத ஆரம்பத்தில் தென்மராட்சியின் கைதடி மற்றும் அல்லாரைப் பகுதிகளைச் சேர்ந்த இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்க

Recommended For You

About the Author: Editor Elukainews