ஒன்றரை கோடி ரூபா ஹெரோயினுடன் தம்பதியினர் கைது!

கல்கிஸ்ஸ – அத்திட்டிய பகுதியில் ஒரு கோடியே 60 லட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கல்கிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 855 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 37 வயதான ஆண் ஒருவரும் 35 வயதான பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் கணவன் – மனைவி என்றும், கைதான ஆண், தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபையின் தொழிலாளர் ஒருவரெனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews