காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் பலி: ஒருவர் படுகாயம்

அனுராதபுரம் மிஹிந்தலை காட்டு பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம் மிஹிந்தலை காட்டுப் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில், குக்குலேவ பிரதேசத்தை சேர்ந்த அவுசதஹாமிகே குணசேகர என்பவரே உயிரிழந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews