ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி!

அம்பலாங்கொட, தெல்துவ பகுதியில் உள்ள ஹோட்டலொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியாகியுள்ளனர். ஹோட்டலில் மது அருந்திக்கொண்டிருந்த நால்வரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த ஏனைய மூவரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெற்கில் பாதாள குழுக்களுக்கிடையிலான மோதல் உச்சம் தொட்டுவருகின்றது. இதனால் தொடர் படுகொலைகள் அரங்கேறிவருகின்றன. இரு பாதாள குழுக்களுக்கிடையிலான மோதலே இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமென சந்தேகிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin