காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

பொலன்னறுவை அரலங்கவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹஓயா 5ஆம் வீட்டுத்திட்ட பிரதேசத்தில், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார் என்று அரலங்கவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீரவில பிரதேசத்தை சேர்ந்த 57 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த நபரை அரலங்கவில வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin