அக்கராயன் மாகாவித்தியாலத்திற்கு அதிபர் ஒருவரை நியமிக்கக் கோரி போராட்டம்……!

கிளிநொச்சி அக்கராயன் மாகாவித்தியாலத்திற்கு அதிபர் ஒருவரை நியம்க்கக் கோரி மாணவர்கள், பெற்றோர் போராட்டம் ஒன்றை  நேற்று  மேற்கொண்டுள்ளனர்.
 
கிளிநொச்சி தெற்கு வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட அக்கராயன் மகாவித்தியாலயத்திற்கு, கடந்த 3 மாதங்களாக அதிபர் நியமிக்கப்படவில்லை.
 
கடமையிலிருந்த அதிபர் பாடசாலை பொறுப்புக்களிலிருந்து விலகியுள்ள நிலையில், புதிய அதிபர் நியமிக்கப்படவில்லை. 
 
இதேவேளை, பிரதி அதிபரும் ஒய்வு நிலையை அடைந்துள்ள நிலையில், மேலதிக சேவைக்காக இணைக்கப்பட்டுள்ளார்.
 
42 ஆசிரியர்களையும், 800 மாணவர்களையும் கொண்ட குறித்த தேசிய பாடசாலையின் நிர்வாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை.
 
இந்த நிலையில், நிரந்தரமாக அதிபர் ஒருவரை நியமித்து தருமாறும், கல்விசார் விடயங்களை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை விரைந்து எடுக்குமாறும் இப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Recommended For You

About the Author: admin