காணாமல் போன பெண் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு.

பதுளை வெலிமடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாப்புகடை பிரதேசத்தில் காணாமல் போயிருந்த பெண்ணொருவர், பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புரங்வெல பிரதேசத்தை சேர்ந்த 54 வயது பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண், ஹோட்டலொன்றில் பணியாற்றி வந்த நிலையிலேயே காணாமல் போயுள்ளார். பெண்ணை காணவில்லை என்று அவரது மகள் வெலிமடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து இருந்த நிலையில், பெண்ணை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வந்தனர். இவ்வாறான நிலையிலேயே கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. படுக்கை விரிப்பினால் சுற்றப்பட்டு இருந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் படுகொலையுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்த 37 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.            இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews