குளவிக் கொட்டுக்கு இலக்கான 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

புத்தளம் சாஹிரா தேசியப் பாடசாலையில் கல்வி கற்கும் 17 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

15 வயதுக்குட்பட்ட 8 மாணவர்களும் 15 வயதுக்கு மேற்பட்ட 9 மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குளவி கொட்டுக்கு இலக்காகிய மாணவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin