
நாட்டில் வடிகால் அமைப்புக்குரிய நீர் பாவனைக்கான கட்டணங்கள் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மின் பாவனைக்கான கட்டணங்களும் கடந்த வாரத்தில் அதிகரிக்கப்பட்டிருந்தது.
இந்த விடயத்தை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.