யாழில் வாள்வெட்டு: இளைஞர் ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதுடன் இளைஞர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார் .

இந்த சம்பவம் இன்று(27) உடுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வாள்வெட்டு தாக்குதல் குழுவொன்றினால் நடத்தப்பட்டதாகவும் அதில் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாகவும் சுண்ணாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான  இளைஞர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin