
156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு பளை மத்திய கல்லூரியில் பொலிஸாரினால் விழிப்புணர்வு நிகழ்வுகள் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் சமூக நடத்தை பிறழ்வுகள், போதைக்கு அடிமையாதல், வீதிப்போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. கல்லூரி அதிபர் க.உதயகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , உப பொலிஸ் பரிசோதகர்கள், வீதிப்போக்குவரத்து பொலிஸ்பிரிவினர் என பலரும் கலந்து கொண்டனர்.