வவுனியாவிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் திருட்டு! 26 வயதான சந்தேகநபர் கைது.. |

யாழ்.சுன்னாகம் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோண்டாவில் பகுதியில் வைத்து சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் வவுனியா செட்டிக்குளத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் என்று பொலிஸார் கூறினர்.

கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 10 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் 3 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார் என்றும் பொலிஸார் கூறினர்.

Recommended For You

About the Author: admin