வாள்வெட்டுக்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் கடந்த 06.10.2022 அன்றைய தினம்  வட்டக்கச்சி மாயனூர் பகுதியில் வசித்துவந்த இளம் குடும்பஸ்தரான 33 வயதுடைய ஜெயசீலன் என்ற 03 பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்திருந்தார்.
வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை  பயனளிக்காத  நிலையில் மீண்டும் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில்10.10.2022 நேற் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Recommended For You

About the Author: admin