யாழ்.சுன்னாகத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகக முயற்சி, போதை அடிமை தப்பியோட்டம்!

யாழ்.சுன்னாகம் பகுதியில் 15 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய போதை அடிமையான 25 வயதான இளைஞன் தலைமறைவாகி உள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தொிவித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பாதிக்கப்பட்ட மாணவி குறித்த இளைஞனை முன்னர் காதலித்துள்ளார். எனினும் ஹெரோயின் பாவனைக்கு அடிமையான விடயம் தொியவந்ததை தொடர்ந்து, காதல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை பாதிக்கப்பட்ட மாணவி தனது சகோதரியுடன் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். இதன்போது சந்தேகநபர் வீதியில் விழுந்து கிடந்துள்ளார்.

பின்னர் இருவரும் சந்தேகநபரை துாக்கி வீட்டுக்கு அனுப்பிவிட்டு பின்னால் தங்கள் வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தபோது ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில உள்ள கட்டிடம் ஒன்றுக்குள் இருந்த சந்தேகநபர் குறித்த 15 வயது மாணவியை இழுத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரி ஆள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு ஓடிச் சென்று ஊர் மக்களையும், உறவினர்களையும் அழைத்துவந்துள்ளார். எனினும் சந்தேகநபர் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews