வெறறிலைக்கேணியில் கடல் நீரை தேக்கி இறால் வளர்ப்பதற்க்கு மக்கள் எதிர்ப்பு…!(video)

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் தனியார் ஒருவர் பல ஏக்கர் காணியை தன்வசப்படுத்திவைத்துள்ள நிலையில் அக்காணியில் இறால் வளர்ப்பதற்க்கென கடல் நீரை உறிஞ்சி அந்நீரை தேக்கி வைப்பதறக்கான  நடவடிக்கையை மக்கள் அண்மையில் முறியடித்துள்ளனர்.

யாழ் மாவட்ட நீரியல் வளத்துறையினருடன் அண்மையில் வெற்றிலைக்கேணி வெளிச்ச வீட்டுப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கரவலைப்பாட்டு பகுதியில் கடல் நீரை குழாய் மூலம் உறிஞ்ச இடத்தை தேர்வு செய்வதற்க்காக வருகைதந்தவர்களை பிரதேச மக்கள் விரட்டியடித்துள்ளனர்.

பல ஏக்கர் காணிகளை அபகரித்தது மட்டுமின்றி கடற்கரையையும் அபகரிக்க அனுமதிக்க முடியாது என மக்கள் விரட்டியடித்துள்ளனர்.

 

 

 

Recommended For You

About the Author: Editor Elukainews