பளை முல்லையடி பகுதியில் விபத்து….!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி யாழ் கண்டி வீதியில் விபத்து ஒன்று சற்றுமுன்னர்  இடம்பெற்றுள்ளது.

யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த பாரஊர்தி ஒன்றினை பின்னால் வந்து கொண்டிருந்த சிறிய ரக வாகனத்தை  முந்திச் செல்ல முற்பட்ட வேளையே குறித்த  விபத்து இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் எந்தவித  உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. குறித்த விபத்து தொடர்பில்  மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews