இந்தோனேசியாவில் இருமல் மருந்து அருந்தியதால் 99 சிறார்கள் பலி

இந்தோனேசியாவில் இருமல் மருந்து அருந்தி 100 சிறார்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு 100 சிறார்கள் உயிரிழந்ததையடுத்து இந்தோனேசியாவில் தற்போது சிரப் மற்றும் திரவ மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை பருகியதால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காம்பியாவில் 70 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில், உலக சுகாதார அமைப்பு குறித்த இருமல் மருந்து தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin