கொழும்பு – குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் பலி

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் அலவ்வ, வலகும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்துச் சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

டிப்பர் ரக வாகனமும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே தாயும், மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணும், அவரது 18 வயது மகனும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த உயிரிழந்த பெண்ணின் கணவரும், மற்றுமொரு மகனும் படுகாயமடைந்த நிலையில் பொல்கஹவெல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin