யாழில் பாண் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்ப்பாணத்தில் பாண் கொள்வனவு செய்த நபருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

அச்சுவேலி பகுதியிலுள்ள கடையொன்றில் நுகர்வோர் ஒருவர் றோஸ் பாண்கள் கொள்வனவு செய்துள்ளார்.

வீட்டுக்கு கொண்டு சென்று சாப்பிட முற்படுகையில், அதில் மூன்று குண்டூசிகள் இருந்தமை கண்டுபிடித்துள்ளார்.

பிள்ளைகளுடன் இணைந்து சாப்பிட தயாராக போதே குண்டூசி அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன்போது குழந்தைகளுக்கு ஏற்படவிருந்த ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin