
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உயிர்கொல்லி ஹெரோயின் போதை விற்பனை இடம்பெறுவதாக பளை பொலிசாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேக நபரகளின் வீட்டை சுற்றிவளைத்த பளை பொலீசார் நேற்று பிற்பகல் 600 மில்லி கிராம் ஹெரோயினுடன் 05 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு மற்றும் தர்மபுரம், பளை தம்பகாமம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
கைதானவர்கள் இன்று (10) கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்தவுள்ளதாகவும் பளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.