
நல்லூரில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்ததினத்தை இனிப்பு கொடுத்து கொண்டாடி மகிழ்ந்த யாசகர் !
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயம் முன்பாக யாசகம் பெறும் ஒருவர் இன்றைய தினம் (26) விடுதலைப்புலிகளின் தலைவர் 68வது பிறந்ததினத்தை இனிப்பு கொடுத்து கொண்டாடி மகிழ்ந்தார்.
குறித்த யாசகர் குடும்பம் சரியான வறுமையில் இருக்கையிலும், தனது சொந்த செலவில் இனிப்புகளை வாங்கி ஆலயத்திற்கு வருகைவோருக்கு மன ஆனந்தத்தோடு கொடுத்து மகிழ்ந்திருந்தார்.
விடுதலைப்புலிகளின் தலைவரின் 68வது பிறந்ததினம் தமிழர் தாயகம் முழுவதும் இன்றைய தினம் கொண்டாப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.