
யாழ்.இணுவில் கிழக்கில் இராணுவ புலனாய்வு பிரிவினால் இரு வாள்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
கோப்பாய் 51வது படைப்பிரிவின் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பில் 35 வயதான குறித்த இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்