பஷில்-ரணில் இடையே சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான  பசில் ராஜபக்சவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் நாட்டுக்கு திரும்பிய பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு நீடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பின் போது, நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் அரசியலமைப்பு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews