மட்டு தொப்பிக்கலையில் கஞ்சா தோட்டம் முற்றுகை ஒருவர் கைது 21 கஞ்சா செடிகள் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தொப்பிக்கல பூலக்காட்டு பிரதேசத்தில் கஞ்சா தோட்டம் ஒன்றை நேற்று செவ்வாய்க்கிழமை (14) முற்றுகையிட்ட பொலிசார் 21 கஞ்சா செடியுடன் 60 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய் வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிசாருடன் இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து சம்பவதினமான நேற்று மாலை 5 மணியளவில: புலக்காட்டிலுள்ள பண்ணை ஒன்றை முற்றுகையிட்டனர் இதன் போது அங்கு கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்து வந்த 60 வயதுடைய ஒருவரை கைது செய்ததுடன் சுமார் 4 அடி கொண்ட 21 கஞ்சா செடிகளை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை இன்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews