வைத்தியசாலையின் 4 ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!

களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் இன்று (14) வைத்தியசாலை கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 65 வயதுடைய கொனவல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுபோவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews