வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் கணவனால் மனைவி , மகள் மீது வாள் வெட்டு

வடமராட்சிக்கிழக்கு வெற்றிலைக்கேணி J/432 கிராம அலுவலர் பிரிவில் குடும்பத்தகராறு காரனமாக கணவனால் வாளினால்  வெட்டப்பட்டு  நமனைவி மற்றும் மகள் இருவரும் படுகாயமடைந்தஜ  கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 குறித்த சம்பவம் நேற்றைய தினம் 15-12-2022 நண்பகல் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவத்தில்  சி,இராசறஞ்சினி மகள் சி.பவித்திரா ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
 நாகர்கோயில் வடக்கு பகுதியில் வசித்துவந்த நிலையில் தொடர்ச்சியாக  குறித்த குடும்பதில் முரண்பாடுகள் அதிகரித்த நிலையில் அங்கும் தலையில் தாக்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில்  சில மாதங்களுக்கு உறவினர்களால்   தாய் மற்றும் மகள் ஆகியோர் வெற்றிலைக்கேணியில் உள்ள தமது உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே  நேற்று குறித்த வாள் வெட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது.
நேற்றைய தினம் குறித்த சம்பவத்தின் போது கணவன் நிறை மது போதையிலேயே இவ்வாறு தாக்குதல் நடாத்தியிருப்பதாக தெரியவருவதுடன்  வாளால் வெட்டப்பட்ட நிலையில் அவர்களால் அவலக்குரல் எழுப்பப்பட்ட நிலையில் அங்கு திரண்ட மக்களால்  அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் அனுப்பப்பட்டு   கிளிநோச்சி வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளதுடன்  தகராறில் ஈடுபட்டநபரை கலைத்துப்பிடித்து கட்டிப்போட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
 காயமடைந்தவர்கள் கிளிநோச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன்  இந்த வெட்டுச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மருதங்கேணிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews