போதைப்பொருட்களுடன் பெண்ணொருவர் உட்பட இருவர் கைது

இன்றைய தினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் 79 போதை மாத்திரைகளுடன் 49 வயதுப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண், வீட்டில் போதை மாத்திரைகள் வைத்திருப்பதாக சுன்னாகம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸாரால் இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலிருந்தது யாழ்ப்பாணத்துக்குக் கடத்தி வரப்பட்ட 180 கிலோகிராம் கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் அதனைக் கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.குருநகர் கடற்பரப்பில் இன்று சந்தேகத்துக்கிடமான முறையில் காணப்பட்ட படகு ஒன்றைக் கடற்படையினர் வழிமறித்துச் சோதனையிட்ட போது படகில் இருந்து கஞ்சாவை மீட்டுள்ளனர்.

அதையடுத்து படகில் இருந்த நபரைக் கைது செய்த கடற்படையினர், படகையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதான நபர், கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் படகுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews