வடக்கில் “கால்நடைகள் காப்பகம்” அமைக்க உதவுமாறு கோரிக்கை!

வடக்கில் கால்நடைகள் காப்பகம் ஒன்றினை அமைப்பதற்கு சமூக தொண்டர் நிறுவனங்கள் மற்றும் சமூக நலன் சார்ந்து சிந்திப்போர் உதவுமாறு வடக்கு மாகாண கால்நடைகள் சுகாதார வைத்திய சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்

இன்று வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

காலநிலை சீரின் மையினால் கடந்த வாரம் வடக்கில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன வடக்கில் உள்ள கால்நடைகளை பாதுகாக்க கூடியதாகவும் இந்த கால்நடைகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த கூடியதாகவும்சில திட்டங்களை முன்வைக்க வேண்டியது அவசியமாகும் வடக்கு மாகாண ஆளுநருடைய எண்ணத்தில் உருவான பாதுகாப்பான புகழிடங்கள் இந்தியாவிலேயே இருக்கின்றது போல கட்டாக்காலி மாடுகளை  ஒரு ஜீவராசிகளாக கணித்து அவர்களுக்கு ஒரு வாழ்விடத்தை கொடுக்க வேண்டும் அவர்களுக்கு உணவை வழங்க வேண்டும்

உணவும் அவர்களுக்கான உறையுளும் வாழுகின்ற உரிமையும் மனிதருக்கு இருப்பதைப் போல சகல மிருகங்களுக்கும் இருக்கின்றது என்பதற்கு உறுதிப்படுத்துவது எமது இலங்கை அரசாங்கத்தினுடைய சட்டங்களிலே பெரும்பாலான சட்டங்களாக இருக்கின்றன

வன விலங்குகளுக்கும் இதே போல ஒரு சட்ட நடைமுறை காணப்படுகின்றது

ஆகவே இந்த மிருகங்களை நாங்கள் வதை செய்யாது அவற்றிற்கு ஒரு பொருத்தமான வாழ்விடத்தை வழங்கும் அதே நேரம் விவசாயம் மற்றும் வீதி போக்குவரத்து போன்றவற்றுக்கு இடையூறு இல்லாதவாறு செய்யக்கூடிய கால்நடைகளுக்கான புகலிடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது வடக்கு ஆளுநர் உடைய ஒரு நீண்ட கால கருத்தாகவும் கோரிக்கையாகவும் இருக்கின்றது.

ஆகவே அந்த கோரிக்கையிலே நடைமுறைப்படுத்த வேண்டுமாக இருந்தால் இதற்காக நிறைய நிதி தேவைப்படும் இவற்றுக்கான கட்டமைப்புகளை மேற்கொள்ள  உணவை வழங்குவதற்கு போன்றவற்றுக்கு நிறைய நிதி தேவைப்படும்

அதே நேரம் அந்த கால்நடைகளில் இருந்து கிடைக்கக்கூடிய பல்வேறு வருமானங்கள்  அவ்வாறான புகழ் இடத்தை நடத்துபவர்களுக்கு ஓரளவு வருமானத்தை கொடுக்கக்கூடும்

ஆகவே இதனை பண்ணையாளர்கள் தங்களால் பராமரிக்க முடியாது இந்த சட்டங்களை நாங்கள் நிறைவேற்றியதன் பின்னர் எங்களால் பராமரிக்க முடியாது என கருதுகின்ற மாடுகளாக இருக்கலாம் அல்லது வீதிகளிலே எந்தவித உரிமையாளர்களும் இல்லாத மாடுகளாக இருக்கலாம் அவற்றை இந்த பாதுகாப்பான புகழிடங்களில் கொண்டு வந்து பராமரிக்க வேண்டும் என்பது ஆளுநருடைய கருத்தாக இருக்கின்றது.

என்றாலும் இவ்வாறான ஒரு நடவடிக்கை செய்வதற்கு நாங்கள் பலருடைய ஆதரவினையும் நிதி மற்றும் ஏனைய ஆதரவுகளை பெற வேண்டி உள்ளது எங்களுடைய திணைக்களத்தினை பொருத்தவரை இவ்வாறான நிலையங்களிலே வளர்க்கப்படுகின்ற மாடுகளுக்கான சுகாதாரம் அல்லது அவற்றுக்கான சுகநலன்களை பராமரிப்பதற்கு அவர்களுக்கு வருத்தம் வரும்போது அதற்கான சிகிச்சை தொழில்நுட்ப ஆலோசனைகளை நாங்கள் வழங்க தயாராக உள்ளோம்.

ஆனால் இவ்வாறு நிலையங்களை நடத்துவதற்கு ஆலயங்கள் ஆலய பரிபாலன சபைகள் மற்றும் இந்து புத்த சமய நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட தனியார் தொண்டு நிறுவனங்கள் அல்லது தனியார் நபர்கள் முன்வருவார்களாக இருந்தால் அவர்களுக்கு தேவையான பூரணஒத்துழைப்பினைவழங்கி அந்த நிலையங்களை நடத்துவதற்கான காணிகள் இனம் கண்டு அவற்றை அவர்களுக்கு விடுவித்து அதே நேரம்

அந்த நிலையங்களில் உருவாகின்ற சேதன பசளைகள் போன்றவற்றை கொள்வனவு செய்து விவசாயிகளுக்கு கொடுப்பதற்கு போன்ற பல்வேறு உதவிகளை அரச நிறுவனங்கள் என்ற ரீதியில் நாங்கள் செய்யலாமென்று இருக்கின்றோம்.

ஆனால் இவ்வாறான ஒரு நிலையங்களை நடத்துவதற்கான உதவியை அதை நடத்துவதற்கான பொறுப்பை பொதுமக்கள்  நலன்சார்ந்து சிந்திக்கும் தனிப்பட்ட நபர்களோ அல்லது நிறுவனங்களோ முன்வந்து செய்ய வேண்டும் என்பது நமது முக்கியமான கோரிக்கையாக இருக்கின்றது ஆகவே இந்த கோரிக்கையினை சமூக ஆர்வலர்கள் அல்லது தொண்டு நிறுவனங்கள் கருத்தில் எடுத்து அவ்வாறு யாராவது இந்த நடவடிக்கை கொண்டு நடத்த விரும்பினால் வடக்கு மாகாண ஆளுநருடன் தொடர்பு கொண்டு அதனை செயல்படுத்துவதற்கு நாங்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கவுள்ளோம் என  தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews