கடும் நெருக்கடியில் கிளிநொச்சி தேங்காய் வியாபாரிகள்! விடுத்துள்ள கோரிக்கை

கிளிநொச்சி பொதுச்சந்தைக்குள் தேங்காய் வியாபாரிகள் கூறு விலை கோரல் மேற்கொள்ளும் இடத்தில் மழை காரணமாக நெருக்கடியை சந்தித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

பொருத்தமற்ற இடம் காரணமாக மழை காலங்களில் சேறும்,சகதியுமாக காணப்படுவதாகவும், அத்தோடு அருகில் உள்ள மலசல கூடங்களிலிருந்து வெளியேறும் நீர் தேங்கி காணப்படுவதாகவும் தேங்காய் வியாபாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனால் கொள்வனவு மற்றும் விற்பனையில் ஈடுப்படுவதில் நெருக்கடியினை சந்தித்துள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கரைச்சி பிரதேச சபையின் கீழ் குறித்த சந்தை காணப்படும் நிலையில் இதனை கருத்திற்கொண்டு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews