யாழ் ஆறுகால்மடம் பகுதியில் 18 கிராம் ஜஸ்போதை பொருள் மற்றும் ஆயிரம் போதை மாத்திரையுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் ஆறுகால் மடம் பகுதியில் போதை பொருள் வியாபரிகளது வீடு ஒன்றை நேற்று திங்கட்கிழமை (26)  இரவு முற்றுகையிட்ட பொலிசார் அங்கு ஐஸ் போதை பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுலின் அடிப்படையில் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பெக்ஸ்டர் தெய்வேந்திரம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று இரவு குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு இளைஞர்களை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 18 கிராம் ஐஸ் போதை பொருள் மற்றும் ஆயிரம் போதை மாத்திரைகளை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews