கொழும்பில் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கும்பலால் குழப்ப நிலை

கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலான பிரதேசத்தில் இருவர் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களது உறவினர்கள் எனக் கூறிக் கொண்ட குழுவினர் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது.

பதற்றமடைந்த சூழ்நிலை காரணமாக பொலிஸாரின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக நேற்றிரவு அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து பொலிஸார் வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான ஜோந்தியா மற்றும் கலயா ஆகிய இருவரின் உறவினர்கள் எனக் கூறிக் கொண்ட குழுவினர் பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸார் கடுமையாக தாக்கியதாகவும்,இருவரும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர்.

எப்படியிருப்பினும் உறவினர்களால் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் சந்தேக நபர்கள் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைத்தொலைபேசி தொடர்பில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அங்குலானை பொலிஸ் நிலையத்திற்கு வந்து பிரச்சினையை தீர்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்குலான பொலிஸ் அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர், பின்னர் அவர்களது உறவினர்கள் குழு வந்து சந்தேக நபர்களை அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்போது ஏற்பட்ட பதற்றத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews