கொக்கட்டிச்சோலையில் 47 வயது பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள படயாண்டவெளியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார் கடந்த 22 ம் திகதி முதல் காணாமல் போயுள்ளார் எனவே இவர் தொடர்பாகன தகவல்கள் தெரிந்தால் உடனடியாக பொலிசாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரான சடாச்சரம் தேவலஷ;மியின் கணவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வரும் நிலையிலஒரு பிள்ளையான  மகனாருடன் வாழ்ந்துவந்த நிலையில் அவர் கடந்து 22 ம் திகதி வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் இதுவரை வீடு திரும்பாது காணாமல் போயுள்ளததையடுத்து அவரை எங்கு தேடியம் கிடைக்காத நிலையில்  அவரது மகன் நேற்று புதன்கிழமை (27)  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனடிப்படையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருவதுடன் காணாமல் போயுள்ளவர் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக 065-2056-936 கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிசார் கோரி;கைவிடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews